Wednesday, 24 November 2010

Posted by . On 8:36 pm 0 comments

பிரபாகரனின் இருப்பு மற்றும் உயிர்ப்பு சர்ச்சையானது தமிழின அறிவீனத்தின் வெளிப்பாடே.

  நடந்து முடிந்த முள்ளி வாய்க்கால் மனித நரபலி வேட்டைக்கு பின்னும் தமிழினம்       தமது கடமையை இன்னும் உணர்ந்தபாடில்லை.
உலக அரசியல், பொருளாதார,சமூக,பிராந்திய நலன் சார்ந்த கூறுகளை உள்வாங்கிக்கொண்டு நமது லட்சியமான ஈழ விடுதலையை ,தற்சமயத்தில் உலக வல்லாதிக்க சக்திகளின் முறுகல் மற்றும் பிணைவு களின் ஊடாக நகர்த்தி செல்லவேண்டும்.விடுதலை போராட்டங்கள் யாவும் பயங்கரவாதமாகி போன இக்காலத்தில்  ஆயுத போராட்டத்திற்கான தளமானது சுருங்கி  போய்கிடக்கிறது

Sunday, 21 November 2010

Posted by . On 9:32 am 0 comments

தமிழ் இனவழிப்பும் பாலியல் வல்லுறவுகளும்

                  உலகத்தமிழர்களின் நிலைத்த உறுதியான போராட்டத்தின் விளைவாக இப்போதுதான் நாகரீகத்தேசங்கள் என கூறிக்கொள்பவை, ஈழத்தொடர்பான  தனது பிழையான புரிதல்களை மறுபரிசீலினைக்கு உட்படுத்த தொடங்கியிருக்கின்றன.பயங்கரவாத ஒடுக்கம் ,உள்நாட்டு சர்ச்சை  என்ற பொருளிலே ஈழ சிக்கலை அணுகிய அவை, சிங்கள அரச பயங்கரவாத்திற்கு முண்டுகொடுத்து இனவழிப்பிற்கு தெரிந்தோ தெரியாமலோ துணைபோய் ஈழ பேரவலம் இனவழிப்பு தான் என இப்போது அம்பலப்படும்போது கையை பிசைந்துக்கொண்டு இருக்கின்றன